தவறான உறவு: தீக்குளிப்பில் முடிந்த கணவன் மனைவி சண்டை

தவறான உறவின் காரணமாக கணவன் மனைவிக்குள் நடந்த சண்டை தீக்குளித்த மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி…

மயிலாப்பூர் ரோட்டரி நகர் 17வது தெருவைச் சேர்ந்த புனிதா(48) என்பவர் நேற்றிரவு திடிரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் வேணு, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து காவல்துறைக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ராயப்பேட்டை போலீசார் புனிதாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

புனிதாவின் கணவரான வேணுவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் புனிதாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் தவறான உறவு இருந்ததாகவும், அதனை கண்டித்து கடந்த இரு தினங்களாக கணவன்-மனைவி இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டதாகவும் நேற்று மாலை இருவருக்குள்ளும் சண்டை முற்றிய நிலையில் நேற்றிரவு புனிதா தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்தது.

84 சதவிகித தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் புனிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து அவரது கணவரிடம் ராயபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Exit mobile version