தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து

மத்திய அரசின் அர்ஜூனா விருது பெற்ற மேசைப்பந்து விளையாட்டு வீரர் சத்தியனுக்கும், துரோணாச்சாரியா விருது பெற்ற பயிற்சியாளர் சீனிவாச ராவ் ஆகியோருக்கு முதலமைச்சர் பழனிசாமி பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.

சர்வதேச அளவில் மேசைப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, பல பதக்கங்களை வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்ந்துள்ள சத்தியனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேசைப்பந்து போட்டிகளில் மேலும் பல வெற்றிகளைக் குவித்து சாதனை சிகரத்தை தொட வேண்டும் என அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேசைப்பந்து விளையாட்டு போட்டியில், மேலும் பல பயிற்சியாளர்களை உருவாக்கி சாதனை படைக்க வேண்டுமென்று துரோணாச்சாரியா விருது பெற்ற பயிற்சியாளர் சீனிவாச ராவுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார்.

Exit mobile version