தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை காமராசர் பல்கலைகழக துணை வேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வு குழுவை அமைத்து 3 மாதங்களுக்குள் துணை வேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், பல்கலைக்கழக சிண்டிகேட்டின் அலுவல் சாரா உறுப்பினர்களாக உள்ள அரசு அதிகாரிகளின் அவசர கூட்டம் கூட்டப்பட்டு தங்கமுத்து நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு தடைவிதிக்கக்கோரி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மகாலிங்கம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார்,சுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வு தங்கமுத்து நியமனம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

Exit mobile version