தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை அனுமதி அளித்தது. அதன்படி, இன்றும், வரும் 23ஆம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதேபோன்று, அக்டோபர் 7 மற்றும் 14ஆம் தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. அதன்படி, தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 654 சிறப்பு முகாம்களில் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது. சென்னையில் 3 ஆயிரத்து 754 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட வருகின்றன. . tn.election.gov.in என்ற இணையதளம் வழியாகவும் பொதுமக்கள் பெயர் சேர்த்தலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version