தமிழகம் மருத்துவத்துறையில் தலைசிறந்து விளங்குகிறது

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்து தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்தார். மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி தலையில் நடைபெற்ற இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அப்போது மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்து தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நன்றி தெரிவித்தார். மேலும் மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பல்நோக்கு உயர் சிகிச்சை பிரிவுகளை தொடங்கி வைப்பதற்கும் தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை மூலம் தமிழக மக்கள், பெரிதும் பயன் பெறுவார்கள் என தெரிவித்த துணை முதலமைச்சர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் தமிழகம் மருத்துவத்துறையில் தலைசிறந்து விளங்கி வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version