தமிழகத்தில் 363 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது!

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 363 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்.

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டு தோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி ஆசிரியர் தினமான இன்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் மும்பெரும் விழா நடைபெற உள்ளது.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறும் விழாவில், 363 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். இந்த ஆண்டு முதல்முறையாக சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருதும் வழங்கப்பட உள்ளது.

மாணவர் சேர்க்கை, புதுமை கற்பித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.

Exit mobile version