மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார்

பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் தொல்லை குற்றச்சாட்டு விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், மற்றொரு பள்ளி ஆசிரியர் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ஆனந்த் மீது, சமூக வலைதளம் மூலம் மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது குறித்து அந்த மாணவி பள்ளி தலைமை ஆசிரியரிடமும் புகார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான குற்றச்சாட்டின் மூலம் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு பள்ளி ஆசிரியர் மீதும் பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version