டெல்லியில் ராகுல் காந்தி பேரணி

பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும், டீசல் விலை உயர்வை கண்டித்தும் நாடு தழுவிய அளவில், இன்றுபோராட்டம் நடத்தப்பட்டது.. டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பேரணி நடத்தினார். இந்த பேரணியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதைத்தொடர்ந்து ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், ராகுல்காந்தி, ராஷ்டிரிய ஜனதா தளம், திமுக மற்றும் ஜனதா தள கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் உரையாற்றினர்.

Exit mobile version