சொந்த தொகுதியில் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இன்று தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றடைந்தார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வாரணாசி சென்ற அவர் இன்று பள்ளி மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். இதனைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

பிரதமர் மோடியை விமான நிலையத்தில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் வரவேற்றார். 

 

 

 

Exit mobile version