NDA Meeting! பிரதமர் மோடிக்கு பூங்கொத்துக் கொடுத்து வரவேற்றார் பொதுச்செயலாளர்!

பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டமானது நடைபெறுவதையொட்டி டெல்லி அசோகா ஹோட்டலில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடி அவர்களை சந்தித்து மலர்கொத்துக் கொடுத்து வருகிறார்கள். முக்கியமாக அதிமுகவின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பிரதமர் மோடி அவர்களை சந்தித்து பூங்கொத்துக் கொடுத்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க மூத்த தலைவர்கள் பலர் வருகை புரிந்துள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்திலிருந்து

அ.தி.மு.க (எடப்பாடி பழனிசாமி),

புதிய தமிழகம் (டாக்டர் கிருஷ்ணசாமி),

தமிழ் மாநில காங்கிரஸ் (ஜி.கே.வாசன்),

புதிய நீதி கட்சி (ஏ.சி.சண்முகம்),

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் (ஜாண் பாண்டியன் )

இந்திய ஜனநாயக கட்சி (பாரிவேந்தர்)

இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் (தேவநாதன் யாதவ்)

ஆகிய முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Exit mobile version