சென்னையில் முக்கியமான  இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

சுதந்திர  தினத்தை  முன்னிட்டு  நாடு முழுவதும் பாதுகாப்பு   ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. .  சென்னை முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.    சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெறவுள்ள  கோட்டை கொத்தளத்தை  சுற்றிலும்  2 ஆயிரம் போலீசார் அடங்கிய  5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு  7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   மக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையங்கள் , ரயில் நிலையங்களில்   போலீசார்  கண்காணிப்பு   பணியில்  ஈடுபட்டுள்ளனர்.
Exit mobile version