சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழ்நாடு சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

அரசு சட்டக்கல்லூரிகளில் 186 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு
ஜூலை 23 ஆம் தேதி முதல், ஆகஸ்டு 6 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் முடிந்து, எழுத்து தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
அக்டோபர் 10-ஆம் தேதி முதல் அக்டோபர் 17-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு www.trn.tn.nic.in என்ற இணையத்தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Exit mobile version