15 மாவட்டங்களில் 126 தேர்வு மையங்களில் இரண்டு பிரிவுகளாக தேர்வு நடைபெற்றது !

புள்ளியியல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வுக்கு 11 ஆயிரத்து 870 ஆண்கள், 23 ஆயிரத்து 416 பெண்கள் என மொத்தம் 35 ஆயிரத்து 286 பேர் விண்ணப்பித்தனர். இந்த தேர்வு 15 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட126 தேர்வு மையங்களில் நடைபெற்றது. குறிப்பாக, சென்னையில் 18 இடங்களில் நடைபெற்ற இந்த தேர்வை 4 ஆயிரத்து 608 பேர் எழுதினர். இரண்டு பிரிவுகளாக தேர்வு நடைபெற்ற நிலையில், காலை 9 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்கு வந்தவர்கள், அனுமதிக்கப்படாததால் பலர் தேர்வு எழுதாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

Exit mobile version