சசிகலாவின் உறவினருக்கு 5வது முறையாக சம்மன்- ஆறுமுகசாமி ஆணையம் நடவடிக்கை

சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமார் விசாரணைக்காக 5-வது முறையாக ஆஜராகக் கோரி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்தது தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமார், 5-வது முறையாக விசாரணைக்காக ஆஜராகக் கோரி, அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை தொடர்பான விபரங்கள் தொடர்பான ஆவணங்களை, நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

Exit mobile version