ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அவகாசம் நீட்டிப்பு

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், 7ஆவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version