மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும், ஆறுமுகசாமி ஆணையத்தின் அவகாசம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த, கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி, ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. ஆணையத்தின் கால அவகாசம் கடந்த 24-ம் தேதியோடு முடிவடைந்த நிலையில், கூடுதலாக 4 மாதங்கள் வழங்கி, 5-வது முறையாக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version