கைவிடப்பட்ட பெண்ணுக்கு கை கொடுத்த அரசு

திருவண்ணாமலை மாவட்டம் கனிகிலுப்பை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தி. 19 வயதான அவர், பெற்றோரை இழந்து தம்பி, தங்கையுடன் வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தார்.

இந்தநிலையில், தன்னுடைய குடும்ப சூழ்நிலை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அவர் மனு அளித்து இருந்தார். இதை பரிசீலித்த ஆட்சியர் கந்தசாமி, தலைமைச் செயலாளரிடம் சிறப்பு அனுமதி பெற்று ஆனந்திக்கு பணி வழங்க முன்வந்தார்.

அதன்படி, 2 வயது குறைவாக இருப்பினும் கருணை அடிப்படையில் ஆனந்திக்கு சத்துணவு அமைப்பாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நியமன ஆணையை ஆனந்தியின் வீட்டிற்கே சென்று ஆட்சியர் கந்தசாமி அளித்தார்.

Exit mobile version