கூட்டுறவு மேம்பாட்டு பணி – அரங்கம் திறப்பு

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி சார்பாக, கூட்டுறவு சங்கங்கள் மேம்பாட்டு பணி தொடர்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த அரங்கத்தை, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். கூட்டுறவு சங்கங்களை மின்னனு மயமாக்கல், அவற்றின் நலன் சார்ந்த பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா, தலைமை கூட்டுறவு வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் 22 மத்திய கூட்டுறவு வங்கிகளின் பொது மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version