கடத்தப்பட்ட காவலர்களின் குடும்பத்தினர் 11 பேர் விடுவிப்பு

காஷ்மீரில் காவல் அதிகாரிகளின் குடும்பத்தை சேர்ந்த 11 பேரை ஹிஸ்புல் முஜாஹிதின் தீவிரவாத அமைப்பினர் கடத்தி சென்றனர். இதையடுத்து அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் சொந்தங்களை விடுவிக்குமாறு சமூக வலைதளங்களில் தீவிரவாதிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். கடத்தப்பட்ட குழந்தை ஒன்றின் தாயார் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தநிலையில் கடத்தப்பட்ட 11 பேரையும் திவிரவாதிகள் விடுவித்துவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. கடத்தப்பட்ட 11 பேரும் எங்கு வைக்கப்பட்டிருந்தனர்? எப்படி விடுவிக்கப்பட்டனர் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

Exit mobile version