எல்லையில் பதற்றம் – இந்திய வீரர் கழுத்து அறுத்து கொலை

ஜம்மு – காஷ்மீர் எல்லையில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரரை, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைப்பகுதியில் மாயமான இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர், நரேந்திர குமார், ராம்கார்க் செக்டார் பகுதியில், கழுத்தறுபட்ட நிலையில் இன்று கண்டு எடுக்கப்பட்டார்.

இந்திய – பாகிஸ்தான் தடுப்புவேலி அமைந்திருக்கும் இடத்தின் அருகே உடலில் 3 தோட்டாக்கள் பாய்ந்த நிலையில், எல்லை பாதுகாப்பு படை வீரரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் எல்லையில் பதற்றத்தை உண்டாக்கி உள்ளது.

இந்தக் கொலைக்கான காரணத்தை உடனடியாக ஆய்வு செய்ய பாகிஸ்தானுக்கு, இந்திய எல்லை பாதுகாப்பு படை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தானின் ராணுவத் தலைமை தளபதிக்கும் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version