"எய்ம்ஸ் குறித்த ஆர்.டி.ஐ. தகவல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது" 

எய்ம்ஸ் குறித்த ஆர்.டி.ஐ. தகவல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எய்ம்ஸ் திட்டப்பணிகளுக்காக மத்திய அரசு 1,264 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை விரைவில் வழங்கும் என்று அவர் கூறினார். இது குறித்து பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வரும் 8-ந் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாகவும், 9-ந் தேதி மத்திய அமைச்சர் நட்டாவை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் ரெட் அலர்ட் மழை எச்சரிக்கையை எதிர்கொள்ள மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். 

Exit mobile version