ஆந்திராவில் 5 துணை முதலமைச்சர்களை நியமிக்க, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு

ஆந்திராவில் 5 துணை முதலமைச்சர்களை நியமிக்க, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.

ஆந்திர அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த 5 பேர் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், காப்பு பிரிவை சேர்ந்தவர்கள் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட உள்ளனர். தற்போது பொறுப்பேற்கும் அமைச்சரவை அடுத்த இரண்டரை ஆண்டுகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 துணை முதலமைச்சர்களும் நாளை பொறுப்பேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version