ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான எய்ம்ஸ் மருத்துவர்கள்

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜி.சி கில்நானி, நிதஷ் நாயக் ஆகியோர் நேரில் ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. இதனையேற்று, எய்ம்ஸ் மருத்துவர்கள் 2 பேர் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராகி உள்ளனர். மருத்துவர்கள் 2 பேரிடமும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் நாளை குறுக்கு விசாரணை நடத்த உள்ளார்.

Exit mobile version