உதவிக்கரம் நீட்டும் மாராத்தான் போட்டி

சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போட்டியின் ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின், 3, 10 மற்றும் 21 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளின் கீழ் போட்டி நடத்தப்பட்டதாக தெரிவித்தார். இதன் மூலம் கிடைக்கும் தொகையில் 200 சக்கர நாற்காலிகள் வாங்க உள்ளதாகவும், அதில் 100 சக்கர நாற்காலிகள் கேரள மாநிலத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version