இந்திய வீரர் தீபக் குமாருக்கு வெள்ளிப் பதக்கம்

 

 

ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகின்றன. முதல் நாளான நேற்று மல்யுத்த விளையாட்டில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா தங்கம் வென்று, நாட்டிற்கு பெருமை சேர்த்தார். 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு பிரிவில் இந்திய வீரர்கள் அபூர்வி சந்தேலா, ரவிக்குமார் இணை வெண்கலம் வென்றது

இந்நிலையில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் தீபக் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் ரேபிள் பிரிவில் அவர் பதக்கம் வென்று அசத்தினார்.

இதனிடையே, மகளிர் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதி போட்டியில் வெற்றி பெற்றார்.

ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் பதக்க பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது.

 

Exit mobile version