உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார் அமித் பங்கல்

 

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் 52 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் அமித் பங்கல் கலந்து கொண்டார்.

இறுதிப்போட்டியில் அமித் பங்கல் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த ஷகோபிடின் ஜொய்ரோவை எதிர்கொண்டார். இதில் 5-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்த பங்கல், வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Exit mobile version