ஆசிய விளையாட்டு : குத்துச்சண்டையில் இந்திய வீரர் தங்கம்

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 14வது நாளான இன்று, ஆண்கள் குத்துச் சண்டை பிரிவில் இந்தியா தங்கம் வென்றது. உஸ்பெகிஸ்தானை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் ஹசன்பாயை வீழ்த்தி இந்திய வீரர் அமீத் பன்கல் தங்கம் வென்று அசத்தினார். பிரிட்ஜ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரணாப் பர்தன் மற்றும் ஷிப்நாத் சர்க்கார் தங்கம் வென்றனர். இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 15 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. 23 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 67 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்திய வீரர்கள் ஸ்குவாஷ், ஹாக்கி, ஜூடோ, டைவிங் போன்ற போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதனால் பதக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. நாளையுடன் ஆசிய விளையாட்டு போட்டி நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

………………………………..

Exit mobile version