உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் தீபக் பூனியா இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தீபக் பூனியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கொலம்பியாவின் கார்லோஸ் இஸ்குவெர்டோவுடன் நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் 86 கிலோ எடைப்பிரிவில், 3-6 என்று பின் தங்கியிருந்த தீபக் பூனியா, பின்னர் சுதாரித்துக் கொண்டு 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். தற்போது இறுதிச்சுற்று வரை முன்னேறியுள்ள தீபக் பூனியாவிற்கு இதுவே முதல் உலக மல்யுத்த போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version