அரசு ஊழியர்களுக்கு கிரண்பேடி புது உத்தரவு

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால், அரசு ஊழியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும் என்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி நகரின் பல பகுதிகளில் அவர் ஆய்வு நடத்தினார். மழை பாதிப்புகளை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், அரசு ஊழியர்கள் அனைவரும் நாளை கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மாநிலம் முழுவதும் 186 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். மழை காரணமாக அரசு அலுவலகங்களுக்கு முதலமைச்சர் நாராயணசாமி இன்று விடுமுறை அளித்த நிலையில், நாளை அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version