அண்ணனை கொலை செய்த தம்பிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை!

அரியலூரில் அண்ணனை கொலை செய்த தம்பிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரியலூர் மாவட்டம் தேவனூரை சேர்ந்த முருகன் மற்றும் சங்கர் ஆகியோர் சகோதரர்கள் ஆவர். இந்தநிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இருசக்கர வாகனம் தொடர்பாக அவர்களிடையே ஏற்பட்ட தகராறு கைகலப்பில் முடிந்தது.

இதில் சங்கர் தனது அண்ணன் முருகனை அடித்ததில், தலை சுற்றி கீழே விழுந்த அவர் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு அரியலூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

வாதங்கள் நிறைவு பெற்றதை தொடர்ந்து தீர்ப்பளித்த நீதிபதி ஜெயக்குமார், சங்கருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Exit mobile version