அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுதால், அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஜூன் ஒன்று முதல் ஆகஸ்ட் 31 வரை உள்ள காலக்கட்டத்தில் 179 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும், இது வழக்கத்தை விட குறைவான பதிவு என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version