வாக்காளர் பட்டியலில் புதிதாக 8 லட்சத்து 62 ஆயிரத்து 373 பேர் விண்ணப்பம் -தலைமை தேர்தல் அதிகாரி

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 62 ஆயிரத்து 373 பேர் விண்ணப்பித்துள்ளதாக, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 1 ம் தேதி வெளியிடப்பட்டது. அதன் தொடர்சியாக செப்டம்பர் 1 ம் தேதி முதல் அக்டோபர் 31 ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 9 மற்றும் 23, அக்டோபர் 7 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், செப்டம்பர் 1 ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொண்டவர்களின் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டார்.

அதன்படி, புதிதாக பெயர் சேர்க்க 8 லட்சத்து 62 ஆயிரத்து 373 விண்ணப்பித்துள்ளனர். பெயர் நீக்கம் செய்ய 77 ஆயிரத்து 879 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

Exit mobile version