திமுக, காங்கிரஸை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அதிமுக சார்பில், ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு காரணமான திமுக,காங்கிரஸ் கட்சியை கண்டித்து கண்டனப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

அக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுகல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். இலங்கையில் நடந்த போருக்கு காங்கிரஸ் உதவியதாக,   அந்நாட்டின் முன்னள் அதிபர் ராஜபக்சேவே கூறியதாக தெரிவித்த அமைச்சர் அதற்கு திமுக துணை போனதாகவும், குறிப்பிட்டார்.

உடனே இந்த இரு கட்சிகளையும் போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் வருகின்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் எனவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

Exit mobile version