குண்டேரிபள்ளம் நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் நீர் தேக்கத்திலிருந்து பாசன வசதிக்காக நீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்ததாக கூறியுள்ளார். இந்த கோரிக்கையை ஏற்று வரும் 30ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால், 2 ஆயிரத்து 498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளதாக குறிப்பிடுள்ள அவர், நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயிகள உயர் மகசூல் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்

Exit mobile version