கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார் !

கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து மிக கனமழையொட்டி அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விளக்கினார்.

நேற்று இரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிண்டியில் உள்ள ராஜ் பவனுக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.

அப்போது தமிழக கவர்னராக பொறுப்பேற்று ஒருவருடம் நிறைவடைந்ததை அடுத்து பர்வாரிலால் புரோகித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் அரசு மேற்கொண்டுள்ள  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி கவர்னரிடம் விளக்கினார்.

இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.

Exit mobile version