ஏர் இந்தியா விமானம் ரத்து

மழை காரணமாக சென்னையில் இருந்து திருச்சி செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், நீர்நிலைகளுக்குச் செல்வதை தவிர்க்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்களும் வெளியூர்களுக்குச் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

இதனால், சென்னையில் இருந்து காலை 7.15 மணிக்கு திருச்சி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில், 20 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர். இதனையடுத்து, பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், சென்னையில் இருந்து திருச்சி செல்லும் ஏர் இந்தியா விமானம், காலையில் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, முன்பதிவு செய்திருந்த 20 பயணிகளும், காலை 10 மணிக்குச் சென்னையில் இருந்து, திருச்சி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Exit mobile version