எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிற்கு அருகே பறந்த சீன விமானங்கள்!

இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப்பகுதிக்கு அருகே, சீன போர் விமானங்கள் பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள, ஹோடான் மற்றும் கர்சுன்கா விமானத் தளத்திலிருந்து இந்த விமானங்கள், எல்லைப் பகுதிக்கு வந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் விமானங்கள் பறந்ததும் தெரிய வந்துள்ளது. எனினும் சீன விமானங்களின் இயக்கத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் உள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் சுகோய் 30 ரக விமானங்களை இந்திய ராணுவம் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

Exit mobile version