நடிகை குஷ்புவிடம் ஏர் இந்தியா மன்னிப்பு கேட்டது!

காலில் அடிபட்ட நிலையில், வெளியூர் செல்வதற்காக நடிகை குஷ்பு நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு அரை மணி நேரத்திற்கும் மேலாக சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கால் வலியுடன் தான் காத்திருந்ததாகவும், பின்னர் விமான நிலையத்தின் வேறு பகுதியில் இருந்து சக்கர நாற்காலி கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், இது கூடவா உங்களிடம் இல்லை என கேள்வி எழுப்பி, ஏர் இந்தியா ட்விட்டர் பக்கத்தை டேக் செய்திருந்தார். இந்நிலையில், அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம், இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Exit mobile version