சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 205ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்களை பார்க்கலாம்…

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 607 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தண்டையார்பேட்டையில் 5 ஆயிரத்து 355 பேரும், தேனாம்பேட்டையில் 5 ஆயிரத்து 213 பேரும், கோடம்பாக்கத்தில் 4 ஆயிரத்து 794 பேரும், அண்ணாநகரில் 4 ஆயிரத்து 766 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். திரு.வி.க. நகரில் 3 ஆயிரத்து 741 பேரும், அடையாறில் 2 ஆயிரத்து 684 பேரும், வளசரவாக்கத்தில் ஆயிரத்து 880 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவொற்றியூரில் ஆயிரத்து 652 பேருக்கும், அம்பத்தூரில் ஆயிரத்து 644 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version