சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 245 ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்களை பார்க்கலாம்…

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 486 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தண்டையார்பேட்டையில் 4 ஆயிரத்து 370 பேரும், தேனாம்பேட்டையில் 4 ஆயிரத்து 143 பேரும், கோடம்பாக்கத்தில் 3 ஆயிரத்து 648 பேரும், அண்ணாநகரில் 3 ஆயிரத்து 431 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். திரு.வி.க. நகரில் 3 ஆயிரத்து 41 பேரும், அடையாறில் ஆயிரத்து 931 பேரும், வளசரவாக்கத்தில் ஆயிரத்து 444 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவொற்றியூரில் ஆயிரத்து 258 பேருக்கும், அம்பத்தூரில் ஆயிரத்து 190 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version