சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47 ஆயிரத்து 650ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்களை பார்க்கலாம்…

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 951 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தண்டையார்பேட்டையில் 5 ஆயிரத்து 717 பேரும், தேனாம்பேட்டையில் 5 ஆயிரத்து 534 பேரும், அண்ணாநகரில் 5 ஆயிரத்து 260 பேரும், கோடம்பாக்கத்தில் 5 ஆயிரத்து 216 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். திரு.வி.க. நகரில் 3 ஆயிரத்து 981 பேரும், அடையாறில் 2 ஆயிரத்து 922 பேரும், வளசரவாக்கத்தில் 2 ஆயிரத்து 58 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பத்தூரில் ஆயிரத்து 859 பேருக்கும், திருவொற்றியூரில் ஆயிரத்து 787 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version