சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு!

சென்னையில் கொரோனா பாதிப்பு, படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 76 ஆயிரத்து 494ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 91 சதவீதம் பேரும், ராயபுரத்தில் 90 சதவீதம் பேரும், மணலியில் 87 சதவீதம் பேரும், தேனாம்பேட்டையில் 86 சதவீதம் பேரும், திருவொற்றியூரில் 85 சதவீதம் பேரும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதேபோல், மாதாவரம், சோழிங்கநல்லூர் மண்டலங்களில் 84 சதவீதம் பேரும், திரு.வி.க. நகர், அண்ணா நகர், பெருங்குடி மண்டலங்களில் 81 சதவீதம் பேரும் குணமடைந்துள்ளனர்.

Exit mobile version