சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு!

சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 67 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதிகபட்சமாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 88 சதவீதம் பேரும், ராயபுரம் மண்டலத்தில் 87 சதவீதம் பேரும், மணலியில் 85 சதவீதம் பேரும், மாதவரத்தில் 84 சதவீதம் பேரும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதேபோல், பெருங்குடி, தேனாம்பேட்டை, திரு.வி.க. நகர் மண்டலங்களில் தலா 82 சதவீதம் பேரும், அண்ணாநகர், வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், திருவொற்றியூரில் 81 சதவீதம் பேரும் குணமடைந்துள்ளனர்.அடையாறு, ஆலந்தூர் மண்டலங்களில் 80 சதவீத பேரும், அம்பத்தூரில் 77 சதவீதம் பேரும், கோடம்பாக்கத்தில் 76 சதவீதம் பேரும் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 

Exit mobile version