சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு!

சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டியது.

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 85 சதவீதம் பேரும், தண்டையார்பேட்டையில் 82 சதவீதம் பேரும், திரு.வி.க. நகரில் 80 சதவிகிதம் பேரும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதேபோல், தேனாம்பேட்டை, பெருங்குடியில் 79 சதவீதம் பேரும், மணலியில் 78 சதவிகிதம் பேரும், அண்ணா நகர் மற்றும் மாதாவரத்தில் 77 சதவிகிதம் பேரும் குணமடைந்துள்ளனர். திருவொற்றியூர் 74 சதவிகிதம் பேரும், அம்பத்தூர், வளசரவாக்கத்தில் 73 சதவிகிதம் பேரும், அடையாறில் 72 சதவிகிதம் பேரும், சோழிங்கநல்லூர், ஆலந்தூர் பகுதிகளில் 71 சதவிகிதம் பேரும் குணமடைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version