சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41 ஆயிரத்து 172 ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்களை பார்க்கலாம்…

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 288 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தண்டையார்பேட்டையில் 5 ஆயிரத்து 116 பேரும், தேனாம்பேட்டையில் 4 ஆயிரத்து 967 பேரும், கோடம்பாக்கத்தில் 4 ஆயிரத்து 485 பேரும், அண்ணாநகரில் 4 ஆயிரத்து 385 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். திரு.வி.க. நகரில் 3 ஆயிரத்து 532 பேரும், அடையாறில் 2 ஆயிரத்து 435 பேரும், வளசரவாக்கத்தில் ஆயிரத்து 719 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவொற்றியூரில் ஆயிரத்து 545 பேருக்கும், அம்பத்தூரில் ஆயிரத்து 519 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

Exit mobile version