டி20 போட்டிகளில் விளையாட அனுமதிக்க பிசிசிஐக்கு யுவராஜ் கடிதம்

டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க அனுமதி கேட்டு அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளார்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் சமீபத்தில், கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து சச்சின் உள்ளிட்ட பல வீரர்களும் யுவராஜ் சிங் இந்திய அணிக்காக செய்த சாதனையை நினைவு கூர்ந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் 20 ஓவர் போட்டிகளில் மட்டும் விளையாட அனுமதி கேட்டு பிசிசிஐக்கு யுவராஜ் சிங் கடிதம் எழுதியுள்ளார். பிசிசிஐ அனுமதி அளிக்கும் பட்சத்தில் ஐபிஎல் உள்ளிட்ட 20 ஓவர் போட்டிகளில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version