குளோபல் டி20 தொடரில் விளையாட யுவராஜ் சிங் ஒப்பந்தம்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற, யுவராஜ் சிங், கனடாவில் நடைபெறும் குளோபல் 20 ஓவர் தொடரின் இரண்டாவது சீசனில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அறிவித்திருந்தார். இருப்பினும், வெளிநாடுகளில் நடத்தப்படும் டி-20 தொடர்களில் பங்கேற்க உள்ளதாகவும், அதற்கு அனுமதி கேட்டு பிசிசிஐ-யிடம் அவர் விண்ணப்பித்திருந்தார். பிசிசிஐ பதில் அனுப்பாத நிலையில், கனடாவில் நடக்கும் குளோபல் 20 ஓவர் தொடரில் விளையாட யுவராஜ் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த தொடரின் இரண்டாவது சீசன், அடுத்த மாதம் 25ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் டொரண்டோ நேஷனல்ஸ் அணிக்காக விளையாட யுவராஜ் சிங் ஒப்பந்தமாகி உள்ளார்.

Exit mobile version