மதுபான கடைக்குள் வெடிகுண்டு வீசிய இளைஞர்கள்

புதுச்சேரியில் மதுவுக்கு பணம் கேட்டதால், மதுபானகடைக்கு வெடிகுண்டு வீசிய 2 இளைஞர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுச்சேரி அடுத்த திருவண்டார்கோவிலில், தனியாருக்கு சொந்தமான மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு வந்த 2  இளைஞர்கள் மதுபானம் கேட்டுள்ளனர். அப்போது பணம் இல்லாமல் மதுபானம் தர, கடை ஊழியர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்து இருந்த நாட்டு வெடிகுண்டை கடைக்குள் வீசி தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்கள் வெடிகுண்டுகள் வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version