டெல்லியிலிருந்து இந்தியா முழுவதும் நடைபயணம் செய்யும் இளைஞர்

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாடு முழுவதும் நடை பயணம் மேற்கொண்டுள்ள, டெல்லியைச் சேர்ந்த இளைஞர் தற்போது மதுரை வந்தடைந்தார்.

டெல்லியை சேர்ந்த இளைஞர் ஆஷிஷ் ஷர்மா என்பவர், கடந்த வருடம் ஜம்மு காஷ்மீரில் இருந்து தனது நடை பயணத்தினை தொடங்கினார். இதில் இந்தியா முழுவதும் 33 மாநிலங்களில், 17 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு வருகிறார். பெண்குழந்தைகள் பணியமர்த்துவது, பாலியல் கொடுமைகளிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பது, சாலையோரங்களில் சுற்றித்திரியும் குழந்தைகளை மீட்பது உள்ளிட்டவகளை வழியுறுத்தி, நடைபயணம் செய்து வருகிறார். தற்போது மதுரை ஆட்சியர் அலுவலகம் வந்த அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திற்கு செல்லும் போது, அந்தந்த மாநில முதலமைச்சர் மற்றும் ஆளுநர்களை சந்தித்து வருவதாகவும், தற்போது தமிழக முதலமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version