சிறுமியை கடத்த முயன்ற இளைஞருக்கு தர்ம அடி

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் சிறுமியை கடத்த முயன்ற ஒருவரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பள்ளி செல்வதற்காக பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த ஏழாம் வகுப்பு மாணவியிடம், நான் உனது அப்பா எனக்கூறி தன்னுடன் வரும்படி இளைஞர் ஒருவர் தகராறு செய்தததாக தெரிகிறது. அந்த சிறுமியின் கையை பிடித்து இழுத்ததால் சிறுமி கதறி அழுதுள்ளார். இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Exit mobile version